நீலகிரி வனத்தில் வறட்சியால் காட்டுத் தீ ஆபத்து - தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி தொடங்கி உள்ளதை அடுத்து, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300 கிலோ மீட்டருக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரியில் பனிக்காலம் முடிந்து கோடை காலம் விரைவில் தொடங்க உள்ளது. இதனால், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. வெப்பநிலை அதிகரித்து வருவதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நீர் நிலைகள் வறண்டு வருகின்றன.



இதனையடுத்து காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய சாலைகளின் ஓரங்களிலும், வன பகுதிக்குள்ளும் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



குறிப்பாக, உதகையிலிருந்து முதுமலைக்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதை, மசினகுடி நெடுஞ்சாலை மற்றும் தொரப்பள்ளி - கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலை என முக்கிய சாலைகளின் இருபுறமும், மசினகுடி, சிங்கார, சீகூர், முதுமலை, தெப்பக்காடு, கார்குடி வனபகுதிக்குள்ளும் என சுமார் 300 கிலோ மீட்டருக்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.



இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



கோடைகாலத்தில் காட்டு தீ ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாவதை தடுக்க அமைக்கபடும் இந்த தீ தடுப்பு கோடுகளைக்கொண்டு, வன பகுதியில் பற்றி எரியும் தீ ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு பரவிச்செல்லாமல் தடுக்க உதவும் என்பதால் ஆண்டுதோறும் கோடை காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...