பொது பயன்பாட்டு இடத்திலிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம் - உடுமலை நகராட்சி அதிரடி

உடுமலை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் பல லட்சம் மதிப்பிலான பொது பயன்பாட்டு நிலத்தை, ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொது பயன்பாட்டு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டது.

உடுமலை நகராட்சியில் புதிய குடியிருப்புகள் அமைக்கப்படும் போது பூங்கா, நூலகம் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் குறிப்பிட்ட அளவிலான இடம் நகராட்சிக்கு ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு ஒதுக்கப்படும் இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்து சொந்தப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சொந்தப் பயன்பாட்டில் உள்ள இடங்கள் மற்றும் நகராட்சியிடம் ஒப்படைக்காத இடங்கள் போன்றவற்றை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் கல்யாணி அம்மாள் லே அவுட் பகுதியில் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் உடுமலை நகராட்சியின் 2வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் பல லட்சம் மதிப்பிலான இடம் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நகரமைப்பு அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் அங்கு சென்ற நகராட்சி ஊழியர்கள், பொக்லைன் மற்றும் ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

உடுமலை நகராட்சியின் தொடர் நில மீட்பு நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...