பொது பயன்பாட்டு இடத்திலிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம் - உடுமலை நகராட்சி அதிரடி

உடுமலை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் பல லட்சம் மதிப்பிலான பொது பயன்பாட்டு நிலத்தை, ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொது பயன்பாட்டு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டது.

உடுமலை நகராட்சியில் புதிய குடியிருப்புகள் அமைக்கப்படும் போது பூங்கா, நூலகம் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் குறிப்பிட்ட அளவிலான இடம் நகராட்சிக்கு ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு ஒதுக்கப்படும் இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்து சொந்தப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சொந்தப் பயன்பாட்டில் உள்ள இடங்கள் மற்றும் நகராட்சியிடம் ஒப்படைக்காத இடங்கள் போன்றவற்றை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் கல்யாணி அம்மாள் லே அவுட் பகுதியில் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் உடுமலை நகராட்சியின் 2வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் பல லட்சம் மதிப்பிலான இடம் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நகரமைப்பு அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் அங்கு சென்ற நகராட்சி ஊழியர்கள், பொக்லைன் மற்றும் ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

உடுமலை நகராட்சியின் தொடர் நில மீட்பு நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...