கோவை ஈஷாவில்‌ கோலாகலமாக தொடங்கிய 'யக்ஷா' கலை திருவிழா!

கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா'கலைத்‌ திருவிழா இன்று (பிப்‌.15) கோலாகலமாக தொடங்கியது. சங்கரா கண்‌ அறக்கட்டளையின்‌ நிர்வாக அறங்காவலர்‌ ரமணி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா'கலைத்‌ திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

இதுதொடர்பாக ஈஷா அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈஷாவின்‌ மஹாசிவராத்திரி விழா வரும்‌ 18ஆம்‌ தேதி மிக விமரிசையாகவும்‌, பிரம்மாண்டமாகவும்‌ கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும்‌ 'யக்ஷா' கலைத்‌ திருவிழா இன்று மாலை தொடங்கியது.

இந்நிகழ்ச்சி கலாச்சாரம்‌, இசை மற்றும்‌ நடனத்தின்‌ செறிவை பறைசாற்றும்‌ விதமாக உலகப்புகழ்‌ பெற்ற கலைஞர்களைக்‌ கொண்டு நடத்தப்படுகிறது.



விழாவின்‌ தொடக்கமாக பண்டிட்‌ ஜெயதீர்த்‌ மேவுண்டியின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் அவரது,‌ அற்புதமான இசை, அங்கு கூடியிருந்த அனைவரையும்‌ மெய்‌ மறக்கச்‌ செய்தது. உலகம்‌ முழுவதும்‌ இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்‌ இந்த நிகழ்ச்சியை நேரில்‌ கண்டு களித்தனர்‌.

அகில இந்திய வானொலியில்‌ 'ஏ-டாப்‌' கிரேடு பெற்ற, 'கிரானா கரானா-வின்‌ ஒளி' என வர்ணிக்கப்படும்‌ ஜெயதீர்த்‌ மேவுண்டி, பண்டிட்‌. ஜஸ்ராஜ்‌ கவுரவ்‌ புரஸ்கார்‌, யங்‌ மேஸ்ட்ரோ விருது, மேவதி கரானா சங்கீத்‌ கவுரவ்‌ புரஸ்கார்‌, சண்முகானந்தா சங்கீத்‌ ஷிரோமணி விருது போன்ற விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்‌ தொடர்ந்து நாளை (பிப்‌. 16) புல்லாங்குழல்‌ இசைக்கலைஞர்‌ சஷாங்க்‌ சுப்ரமணியத்தின்‌ இசை நிகழ்ச்சியும்‌, நாளை மறுநாள்‌ (பிப்‌. 17) மாதவி முத்கல்‌ குழுவினரின்‌ ஒடிசி நடன நிகழ்ச்சியும்‌ நடைபெற உள்ளது.

இந்த கலை நிகழ்ச்சிகள்‌ ஈஷாவில்‌ உள்ள சர்யகுண்டம்‌ மண்டபம்‌ முன்பாக தினமும்‌ மாலை 7 மணி முதல்‌ 9 மணி வரை நடைபெறும்‌. இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...