கோவை ஈஷாவில்‌ கோலாகலமாக தொடங்கிய 'யக்ஷா' கலை திருவிழா!

கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா'கலைத்‌ திருவிழா இன்று (பிப்‌.15) கோலாகலமாக தொடங்கியது. சங்கரா கண்‌ அறக்கட்டளையின்‌ நிர்வாக அறங்காவலர்‌ ரமணி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா'கலைத்‌ திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

இதுதொடர்பாக ஈஷா அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈஷாவின்‌ மஹாசிவராத்திரி விழா வரும்‌ 18ஆம்‌ தேதி மிக விமரிசையாகவும்‌, பிரம்மாண்டமாகவும்‌ கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும்‌ 'யக்ஷா' கலைத்‌ திருவிழா இன்று மாலை தொடங்கியது.

இந்நிகழ்ச்சி கலாச்சாரம்‌, இசை மற்றும்‌ நடனத்தின்‌ செறிவை பறைசாற்றும்‌ விதமாக உலகப்புகழ்‌ பெற்ற கலைஞர்களைக்‌ கொண்டு நடத்தப்படுகிறது.



விழாவின்‌ தொடக்கமாக பண்டிட்‌ ஜெயதீர்த்‌ மேவுண்டியின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் அவரது,‌ அற்புதமான இசை, அங்கு கூடியிருந்த அனைவரையும்‌ மெய்‌ மறக்கச்‌ செய்தது. உலகம்‌ முழுவதும்‌ இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்‌ இந்த நிகழ்ச்சியை நேரில்‌ கண்டு களித்தனர்‌.

அகில இந்திய வானொலியில்‌ 'ஏ-டாப்‌' கிரேடு பெற்ற, 'கிரானா கரானா-வின்‌ ஒளி' என வர்ணிக்கப்படும்‌ ஜெயதீர்த்‌ மேவுண்டி, பண்டிட்‌. ஜஸ்ராஜ்‌ கவுரவ்‌ புரஸ்கார்‌, யங்‌ மேஸ்ட்ரோ விருது, மேவதி கரானா சங்கீத்‌ கவுரவ்‌ புரஸ்கார்‌, சண்முகானந்தா சங்கீத்‌ ஷிரோமணி விருது போன்ற விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்‌ தொடர்ந்து நாளை (பிப்‌. 16) புல்லாங்குழல்‌ இசைக்கலைஞர்‌ சஷாங்க்‌ சுப்ரமணியத்தின்‌ இசை நிகழ்ச்சியும்‌, நாளை மறுநாள்‌ (பிப்‌. 17) மாதவி முத்கல்‌ குழுவினரின்‌ ஒடிசி நடன நிகழ்ச்சியும்‌ நடைபெற உள்ளது.

இந்த கலை நிகழ்ச்சிகள்‌ ஈஷாவில்‌ உள்ள சர்யகுண்டம்‌ மண்டபம்‌ முன்பாக தினமும்‌ மாலை 7 மணி முதல்‌ 9 மணி வரை நடைபெறும்‌. இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...