கிணத்துக்கடவு அருகே தனியார் பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - உயிர் தப்பிய பயணிகள்!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கல்லாங்காட்டுபுதூரில் அரசு பேருந்து மோதியதில் தனியார் பள்ளி வேன் மின்கம்பத்தின் மீது மோதி நின்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வேனில் பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



கோவை: கிணத்துக்கடவு அருகே கோவை - பொள்ளாச்சி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான மாணவர்களை ஏற்றி செல்லும் வேன் காலையில் பள்ளியில் மாணவர்களை இறக்கிவிட்டு பெட்ரோல் நிரப்புவதற்காக கல்லாங்காடுபுதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது, பெட்ரோல் நிரப்புவதற்காக சாலையில் இருந்து இடதுபுறமாக திரும்பும்போது பின்னால் கோவையில் இருந்து வால்பாறை நோக்கி வந்த அரசு பேருந்து முன்னால் சென்ற பள்ளி வேனின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது.



இதில் பள்ளி வேன் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. மேலும், அரசு பேருந்து முன் பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. பள்ளி வேனில் பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



அரசு பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் பொள்ளாச்சி-கோவை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...