வால்பாறையில் தைப்பூச திருவிழா - பறவைக் காவடியில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில், பக்தர்கள் 1008 பால் குடம், பறவைக் காவடி, வேல் குத்தி அழகு பூட்டி நேர்த்திக் கடனை செலுத்தினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனிடையே கடந்த 4ஆம் தேதி கோவிலில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெற்றது.



இந்நிலையில், தைப்பூச தினமான நேற்று காலை ஓம் சக்தி வழிபாடு குழுவினர் சார்பாக 1008 பால் குடம் தீர்த்தம் கொண்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.



இதை தொடர்ந்து வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் மைதானத்தில் இருந்து முருக பக்தர்கள் அங்க அழகு பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.



அப்போது, மேளதாளங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் ஊர்வலமாக சென்று சுப்பிரமணி திருக்கோவிலை அடைந்து.



தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...