வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில், பக்தர்கள் 1008 பால் குடம், பறவைக் காவடி, வேல் குத்தி அழகு பூட்டி நேர்த்திக் கடனை செலுத்தினர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனிடையே கடந்த 4ஆம் தேதி கோவிலில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்நிலையில், தைப்பூச தினமான நேற்று காலை ஓம் சக்தி வழிபாடு குழுவினர் சார்பாக 1008 பால் குடம் தீர்த்தம் கொண்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
இதை தொடர்ந்து வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் மைதானத்தில் இருந்து முருக பக்தர்கள் அங்க அழகு பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
அப்போது, மேளதாளங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் ஊர்வலமாக சென்று சுப்பிரமணி திருக்கோவிலை அடைந்து.
தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.