வால்பாறையில் தைப்பூச திருவிழா - பறவைக் காவடியில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில், பக்தர்கள் 1008 பால் குடம், பறவைக் காவடி, வேல் குத்தி அழகு பூட்டி நேர்த்திக் கடனை செலுத்தினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனிடையே கடந்த 4ஆம் தேதி கோவிலில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெற்றது.



இந்நிலையில், தைப்பூச தினமான நேற்று காலை ஓம் சக்தி வழிபாடு குழுவினர் சார்பாக 1008 பால் குடம் தீர்த்தம் கொண்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.



இதை தொடர்ந்து வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் மைதானத்தில் இருந்து முருக பக்தர்கள் அங்க அழகு பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.



அப்போது, மேளதாளங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் ஊர்வலமாக சென்று சுப்பிரமணி திருக்கோவிலை அடைந்து.



தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...