தாராபுரம் வழியாகத் தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கல்.
திருப்பூர்: பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்குப் போக்குவரத்து போலீசார் ஒளிரும் பட்டைகளை பக்தர்களின் கையில் கட்டி வழி அனுப்பி வைத்தனர்.
திருப்பூர், பல்லடம், ஈரோடு, சேலம், எடப்பாடி உள்ளிட்ட பல பகுதியிலிருந்து தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக காலை முதல் இரவு வரை விடிய விடியப் பக்தர்கள் பாதயாத்திரையாகச் சாலையில் நடந்து செல்கின்றனர்.
இதனால் விபத்திலிருந்து பாதுகாப்பாகச் செல்ல வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பழனி செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்கா வண்ணம் பாதயாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் அதிகாரிகள் அலங்கியம் ரவுண்டானா சாலையில் நின்று பாதயாத்திரை செல்லும் பக்தர்களை வரிசையில் நிறுத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.
பின்னர் சாலையில் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் மக்கள் நடமாட்டம் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில், ஒளிரும் பட்டைகளைப் பக்தர்களின் கையில் கட்டி வழி அனுப்பி வைத்தனர்.
திருப்பூர், பல்லடம், ஈரோடு, சேலம், எடப்பாடி உள்ளிட்ட பல பகுதியிலிருந்து தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக காலை முதல் இரவு வரை விடிய விடியப் பக்தர்கள் பாதயாத்திரையாகச் சாலையில் நடந்து செல்கின்றனர்.
இதனால் விபத்திலிருந்து பாதுகாப்பாகச் செல்ல வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பழனி செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்கா வண்ணம் பாதயாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் அதிகாரிகள் அலங்கியம் ரவுண்டானா சாலையில் நின்று பாதயாத்திரை செல்லும் பக்தர்களை வரிசையில் நிறுத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.
பின்னர் சாலையில் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் மக்கள் நடமாட்டம் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில், ஒளிரும் பட்டைகளைப் பக்தர்களின் கையில் கட்டி வழி அனுப்பி வைத்தனர்.