தாராபுரத்தில் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை வழங்கிய போக்குவரத்து போலீசார்

தாராபுரம் வழியாகத் தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கல்.


திருப்பூர்: பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்குப் போக்குவரத்து போலீசார் ஒளிரும் பட்டைகளை பக்தர்களின் கையில் கட்டி வழி அனுப்பி வைத்தனர்.

திருப்பூர், பல்லடம், ஈரோடு, சேலம், எடப்பாடி உள்ளிட்ட பல பகுதியிலிருந்து தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக காலை முதல் இரவு வரை விடிய விடியப் பக்தர்கள் பாதயாத்திரையாகச் சாலையில் நடந்து செல்கின்றனர்.

இதனால் விபத்திலிருந்து பாதுகாப்பாகச் செல்ல வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பழனி செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்கா வண்ணம் பாதயாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிகாரிகள் அலங்கியம் ரவுண்டானா சாலையில் நின்று பாதயாத்திரை செல்லும் பக்தர்களை வரிசையில் நிறுத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.

பின்னர் சாலையில் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் மக்கள் நடமாட்டம் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில், ஒளிரும் பட்டைகளைப் பக்தர்களின் கையில் கட்டி வழி அனுப்பி வைத்தனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...