தாராபுரத்தில் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை வழங்கிய போக்குவரத்து போலீசார்

தாராபுரம் வழியாகத் தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கல்.


திருப்பூர்: பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்குப் போக்குவரத்து போலீசார் ஒளிரும் பட்டைகளை பக்தர்களின் கையில் கட்டி வழி அனுப்பி வைத்தனர்.

திருப்பூர், பல்லடம், ஈரோடு, சேலம், எடப்பாடி உள்ளிட்ட பல பகுதியிலிருந்து தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக காலை முதல் இரவு வரை விடிய விடியப் பக்தர்கள் பாதயாத்திரையாகச் சாலையில் நடந்து செல்கின்றனர்.

இதனால் விபத்திலிருந்து பாதுகாப்பாகச் செல்ல வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பழனி செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்கா வண்ணம் பாதயாத்திரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிகாரிகள் அலங்கியம் ரவுண்டானா சாலையில் நின்று பாதயாத்திரை செல்லும் பக்தர்களை வரிசையில் நிறுத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.

பின்னர் சாலையில் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் மக்கள் நடமாட்டம் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில், ஒளிரும் பட்டைகளைப் பக்தர்களின் கையில் கட்டி வழி அனுப்பி வைத்தனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...