பொள்ளாச்சியில் தென்னையில் நோய் தாக்குதல் - விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி!

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் கேரளா வாடல் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து பொள்ளாச்சியில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 16 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்னை மரங்களில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு விதமான நோய் மற்றும் பூச்சிகள் தாக்கி சாகுபடி பாதிப்புக்குள்ளாகிவருகிறது. இதனால், தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதனைத் தொடர்ந்து, தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் கேரளா வாடல் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் சார்பில் பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு விஞ்ஞானிகள் கவிதா, ஜானகிராணி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு தென்னங்கன்றுகள் தேர்வு செய்யும் முறை, பூச்சிகளை கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், காண்டாமிருக வண்டை கவர்ந்திழுக்கும் இனக்கவர்ச்சி பொறிகள், உயிர் உரங்கள் பயன்பாடு போன்றவை குறித்து செயல் விளக்கத்துடன் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினர்.

இதில், பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏராளமான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...