பொள்ளாச்சியில் தென்னையில் நோய் தாக்குதல் - விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி!

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் கேரளா வாடல் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து பொள்ளாச்சியில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 16 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்னை மரங்களில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு விதமான நோய் மற்றும் பூச்சிகள் தாக்கி சாகுபடி பாதிப்புக்குள்ளாகிவருகிறது. இதனால், தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதனைத் தொடர்ந்து, தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் கேரளா வாடல் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் சார்பில் பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு விஞ்ஞானிகள் கவிதா, ஜானகிராணி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு தென்னங்கன்றுகள் தேர்வு செய்யும் முறை, பூச்சிகளை கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், காண்டாமிருக வண்டை கவர்ந்திழுக்கும் இனக்கவர்ச்சி பொறிகள், உயிர் உரங்கள் பயன்பாடு போன்றவை குறித்து செயல் விளக்கத்துடன் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினர்.

இதில், பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏராளமான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...