பொள்ளாச்சியில் தென்னையில் நோய் தாக்குதல் - விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி!

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் கேரளா வாடல் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து பொள்ளாச்சியில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 16 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்னை மரங்களில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு விதமான நோய் மற்றும் பூச்சிகள் தாக்கி சாகுபடி பாதிப்புக்குள்ளாகிவருகிறது. இதனால், தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதனைத் தொடர்ந்து, தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் கேரளா வாடல் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் சார்பில் பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு விஞ்ஞானிகள் கவிதா, ஜானகிராணி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு தென்னங்கன்றுகள் தேர்வு செய்யும் முறை, பூச்சிகளை கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், காண்டாமிருக வண்டை கவர்ந்திழுக்கும் இனக்கவர்ச்சி பொறிகள், உயிர் உரங்கள் பயன்பாடு போன்றவை குறித்து செயல் விளக்கத்துடன் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினர்.

இதில், பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏராளமான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...