வால்பாறை சுப்ரமணியசாமி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூச திருவிழா

வால்பாறையில் உள்ள சுப்ரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ள நிலையில், முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் பிப்.4ஆம் தேதி நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது.

வால்பாறையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் 18 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்வு வரும் பிப்ரவரி 4ஆம் தேதி மாலை 6 மணி நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து 5ஆம் தேதி காலை 9 மணிக்கு வால்பாறை ஓம் சக்தி வழிபாடு, மன்ற குழுவினர் சார்பில் பால்குட தீர்த்தம் கொண்டு வரப்பட்டு காலை 10:00 மணிக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து நல்லகாத்து எஸ்டேட் பாலத்தில் இருந்து முருக பக்தர்கள் அழகு பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலுக்கு சென்று 11 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு அலங்காரத்துடன் வள்ளி, தெய்வானை தேவியுடன் முருகன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



இந்நிலையில், தைப்பூச விழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி உள்ள நிலையில், திருக்கல்யாண நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் விரைவாக செய்து வருகின்றனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...