கோவை சூலூரில் பணிச்சுமை காரணமாக போக்குவரத்து ஊழியர் தற்கொலை முயற்சி - பரபரப்பு..!

சூலூர் அருகே பணிச்சுமை காரணமாகவும், விருப்ப ஓய்வு தராமல் இழுத்தடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான போக்குவரத்து கழக ஊழியர் ரமேஷ் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பணிச்சுமை காரணமாக போக்குவரத்து கழக ஊழியர் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை கே.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில், இவர் கடந்த 28 ஆண்டுகளாக முதுநிலை தொழில்நுட்ப பணியாளராக அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார்.



சாய்பாபா காலனியில் உள்ள தலைமை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்த ரமேஷ், இரவு பணிகளில் மட்டுமே அதிகம் பணியாற்றி வந்துள்ளார். இதன் காரணமாக மற்ற சக பணியாளர்கள் இவர் இரவு பணி நேரத்தில் மட்டும் வேலைக்கு வருவதாக தலைமை கோட்ட மேலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை செய்யாமல் ரமேஷை சூலூர் கிளை போக்குவரத்து கழகத்திற்கு பணி மாறுதல் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மனஉளைச்சலில் இருந்த ரமேஷ், கடந்த மாதம் சூலூர் கிளையில் நான்கு நாட்கள் மட்டுமே பணிக்கு வந்துவிட்டு விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நேற்று மீண்டும் பணிக்கு வருவதற்காக சூலூர் கிளை மேலாளரிடம் செல்போனில் தெரிவித்திருக்கிறார். அதற்கு மேலாளர் ரமேஷை கடுமையாகத் திட்டியதாகவும் தகாத வார்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ரமேஷ் பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள மருந்தகத்தில் எலி மருந்தை ஒன்றை வாங்கி சாப்பிட்டுவிட்டு வேலைக்கு வந்துள்ளார்.

அப்போது அவர் வாந்தி எடுத்ததால், அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை, பேருந்தில் ஏற்றி பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ரமேஷ்-க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...