கோவை சூலூரில் பணிச்சுமை காரணமாக போக்குவரத்து ஊழியர் தற்கொலை முயற்சி - பரபரப்பு..!

சூலூர் அருகே பணிச்சுமை காரணமாகவும், விருப்ப ஓய்வு தராமல் இழுத்தடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான போக்குவரத்து கழக ஊழியர் ரமேஷ் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பணிச்சுமை காரணமாக போக்குவரத்து கழக ஊழியர் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை கே.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில், இவர் கடந்த 28 ஆண்டுகளாக முதுநிலை தொழில்நுட்ப பணியாளராக அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார்.



சாய்பாபா காலனியில் உள்ள தலைமை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்த ரமேஷ், இரவு பணிகளில் மட்டுமே அதிகம் பணியாற்றி வந்துள்ளார். இதன் காரணமாக மற்ற சக பணியாளர்கள் இவர் இரவு பணி நேரத்தில் மட்டும் வேலைக்கு வருவதாக தலைமை கோட்ட மேலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை செய்யாமல் ரமேஷை சூலூர் கிளை போக்குவரத்து கழகத்திற்கு பணி மாறுதல் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மனஉளைச்சலில் இருந்த ரமேஷ், கடந்த மாதம் சூலூர் கிளையில் நான்கு நாட்கள் மட்டுமே பணிக்கு வந்துவிட்டு விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நேற்று மீண்டும் பணிக்கு வருவதற்காக சூலூர் கிளை மேலாளரிடம் செல்போனில் தெரிவித்திருக்கிறார். அதற்கு மேலாளர் ரமேஷை கடுமையாகத் திட்டியதாகவும் தகாத வார்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ரமேஷ் பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள மருந்தகத்தில் எலி மருந்தை ஒன்றை வாங்கி சாப்பிட்டுவிட்டு வேலைக்கு வந்துள்ளார்.

அப்போது அவர் வாந்தி எடுத்ததால், அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை, பேருந்தில் ஏற்றி பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ரமேஷ்-க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...