உடுமலை அருகே வாகனம் மோதி பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண் பலி!

கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பழனிக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து பெண்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்கள், உடுமலையிலிருந்து பழனியை நோக்கி அதிகாலை 3 மணி அளவில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, மடத்துக்குளம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நரசிங்கபுரம் மேடு பகுதியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாத யாத்திரை சென்றவர்கள் மீது மோதி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.



இந்த விபத்தில் நிர்மலா (52) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், செல்வராணி (40)என்பவர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



இச்சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மடத்துக்குளம் போலீசார், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...