கோவை தடாகம் சாலையில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

கோவை தடாகம் சாலையில் அதிக பாரத்துடன் சென்ற லாரி, குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு.


கோவை: கோவை தடாகம் ரோட்டில் சிவாஜி காலனி, கே.என்.ஜி புதூர் உட்பட பல்வேறு பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல இடங்களில் குழி தோண்டப்பட்டது. சில இடங்களில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. சரியாக குழாய் பதிக்காமல், குழியை முழுவதும் மூடாமல் அறைகுறையாக விட்டுவிட்டனர்.

இந்நிலையில் அந்த சாலை வழியாக இரும்பு கம்பி லோடு ஏற்றிச் சென்ற லாரி, இடையர்பாளையம் அருகே வந்த போது குழாய் பதிக்கப்பட்டு மூடிய குழியில் இறங்கியது. இதையடுத்து அதிக பாரத்துடன் நிற்கும் லாரியை மீட்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

லாரி சிக்கி இருந்த இடத்தின் பக்கவாட்டு பகுதியில் செல்ல முயன்ற பழைய இரும்பு ஏற்றி வந்த ஆட்டோ ஒன்றும் பாரம் தாங்காமல் பள்ளத்தில் சிக்கியது. இதன் காரணமாக தடாகம் சாலையில் கோவில்மேடு இடையர்பாளையம் இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினரோ குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களோ வராததால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே போக்குவரத்தை சீர் செய்யும் நிலை ஏற்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...