கோவை தடாகம் சாலையில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

கோவை தடாகம் சாலையில் அதிக பாரத்துடன் சென்ற லாரி, குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு.


கோவை: கோவை தடாகம் ரோட்டில் சிவாஜி காலனி, கே.என்.ஜி புதூர் உட்பட பல்வேறு பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல இடங்களில் குழி தோண்டப்பட்டது. சில இடங்களில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. சரியாக குழாய் பதிக்காமல், குழியை முழுவதும் மூடாமல் அறைகுறையாக விட்டுவிட்டனர்.

இந்நிலையில் அந்த சாலை வழியாக இரும்பு கம்பி லோடு ஏற்றிச் சென்ற லாரி, இடையர்பாளையம் அருகே வந்த போது குழாய் பதிக்கப்பட்டு மூடிய குழியில் இறங்கியது. இதையடுத்து அதிக பாரத்துடன் நிற்கும் லாரியை மீட்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

லாரி சிக்கி இருந்த இடத்தின் பக்கவாட்டு பகுதியில் செல்ல முயன்ற பழைய இரும்பு ஏற்றி வந்த ஆட்டோ ஒன்றும் பாரம் தாங்காமல் பள்ளத்தில் சிக்கியது. இதன் காரணமாக தடாகம் சாலையில் கோவில்மேடு இடையர்பாளையம் இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினரோ குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களோ வராததால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே போக்குவரத்தை சீர் செய்யும் நிலை ஏற்பட்டது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...