'பொருளாதாரத்தில் பலமாக இல்லாவிடில் கலாச்சாரம், ஆன்மீகத்தை பாதுகாக்க முடியாது..!' - கோவை ஈஷா நிறுவனர் சத்குரு பேச்சு

பொருளாதாரத்தில்‌ பலமாக இல்லாவிட்டால்‌ நம்‌ நாட்டில்‌ இருக்கும்‌ கலாச்சாரம்‌, ஆன்மீகம்‌ என எதையும்‌ நம்மால்‌ பாதுகாக்க முடியாது என்று குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ஈஷா நிறுவனர் சத்குரு பேச்சு.


கோவை: கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.



கோவை ஈஷா மையத்தில் 74வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.



இதில் சத்குரு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது,



தேசத்தில்‌ வாழும்‌ நாம்‌ ஜாதி, மதம்‌, மொழி, இனம்‌, உணவுப் பழக்கம்‌, கலாச்சாரம்‌ எனப் பல விதங்களில்‌ வேறுபட்டு உள்ளோம்‌. நம்மிடம்‌ எவ்வளவு வேறுபாடுகள்‌ இருந்தாலும்‌ நாம்‌ அனைவரும்‌ பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்‌.

சுதந்திரத்திற்கு முன்பு நம்‌ தேசத்தை 600-க்கும்‌ மேற்பட்ட குறு நில அரசர்கள்‌ ஆட்சி செய்து வந்தனர்‌. இருப்பினும்‌, வெளியிலிருந்து வந்தவர்கள்‌ அனைவரும்‌ நம்மை இந்துஸ்தான்‌ அல்லது பாரதம்‌ என்று ஒற்றை பெயர்‌ வைத்தே அழைத்தனர்‌.

நம்மிடம்‌ இருக்கும்‌ இந்த பன்மைத்துவத்தையும்‌, வேறுபாடுகளையும்‌ பயன்படுத்தி நமக்குள்‌ பிரிவினையை உருவாக்கும்‌ செயல்கள்‌ கடந்த 600 முதல்‌ 700 ஆண்டுகளில்‌ மிகவும்‌ தீவிரமாக நடந்துள்ளன. நம்‌ தேசத்தின்‌ மீது படையெடுத்தவர்களும்‌, ஆக்கிரமித்தவர்களும்‌ இதைப் பல வழிகளில்‌ மிகவும்‌ திட்டமிட்டுச் செய்துள்ளனர்‌.



குறிப்பாக, நம்‌ தேசத்தின்‌ பொருளாதார முதுகெலும்பைத் தகர்ப்பதற்கும்‌ அவர்கள்‌ செயல்‌ செய்துள்ளார்கள்‌. 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகளவில்‌ பொருளாதாரத்தில்‌ வளமான தேசமாக நம்‌ பாரத தேசம்‌ இருந்தது. அந்த நிலையை மீண்டும்‌ அடையும்‌ முயற்சியில்‌ நாம்‌ தற்போது உள்ளோம்‌.

பொருளாதார பலம்‌ இல்லாமல்‌ கலாச்சாரம்‌, ஆன்மீக விழுமியங்கள்‌ என நாட்டில்‌ உள்ள எதையும்‌ நம்மால்‌ பாதுகாக்க முடியாது. மேலும்‌, நம்மிடம்‌ இருக்கும்‌ பல விதமான வேறுபாடுகளைக் கடந்து எது நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது என்பதை நீங்கள்‌ கண்டறிந்து அதை மேலும்‌ பலப்படுத்த வேண்டும்,‌ என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...