கோவையில் தாத்தா, பாட்டிகள் தினம் - பாத பூஜை செய்து ஆசிர்வாதம் பெற்ற குழந்தைகள்!

கோவையில் முதியோர்களை போற்றும் வகையில், குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டிகளை பள்ளிக்கு அழைத்து வந்து, பாதபூஜை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மாறி வரும் நவீன உலகில் கூட்டுக்குடும்ப முறை மெதுவாக குறைந்து வருகிறது.



இந்நிலையில், கூட்டு குடும்ப முறையை போற்றும் விதமாகவும், பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது.



அதில், பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் தங்களது தாத்தா பாட்டிகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பாதபூஜை செய்தனர்.

தொடர்ந்து, தாத்தா பாட்டி மற்றும் பேரன், பேத்திகளுக்கு உள்ள புரிதலை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன.

இது குறித்து பள்ளியின் நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்திரன் கூறுகையில், கூட்டு குடும்ப முறைகள் தற்போது குறைந்து வரும் நிலையில், பள்ளியில் பயிலும் குழந்தைகள் உறவினர்களின் அருமை மற்றும் பாரம்பரிய முறைகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...