கோவையில் தாத்தா, பாட்டிகள் தினம் - பாத பூஜை செய்து ஆசிர்வாதம் பெற்ற குழந்தைகள்!

கோவையில் முதியோர்களை போற்றும் வகையில், குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டிகளை பள்ளிக்கு அழைத்து வந்து, பாதபூஜை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மாறி வரும் நவீன உலகில் கூட்டுக்குடும்ப முறை மெதுவாக குறைந்து வருகிறது.



இந்நிலையில், கூட்டு குடும்ப முறையை போற்றும் விதமாகவும், பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது.



அதில், பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் தங்களது தாத்தா பாட்டிகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பாதபூஜை செய்தனர்.

தொடர்ந்து, தாத்தா பாட்டி மற்றும் பேரன், பேத்திகளுக்கு உள்ள புரிதலை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன.

இது குறித்து பள்ளியின் நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்திரன் கூறுகையில், கூட்டு குடும்ப முறைகள் தற்போது குறைந்து வரும் நிலையில், பள்ளியில் பயிலும் குழந்தைகள் உறவினர்களின் அருமை மற்றும் பாரம்பரிய முறைகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...