உடுமலை அருகே வாடகை வீட்டில் கள்ளநோட்டு அடித்த போலி வனத்துறை அதிகாரி கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வனத்துறை அதிகாரி எனக் கூறி வாடகைக்கு வீடு எடுத்து கள்ள நோட்டு அடித்த நபரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.1,78,000 ரூபாய் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் கொழுமம் பகுதியில் பிரபு (வயது39) என்பவர் வீட்டில், கேரள மாநிலம் மறையூர் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக குமரலிங்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தமிழ்நாடு போலீசார் இது குறித்து விசாரித்தபோது, கடந்த வாரம் கேரளாவில் கள்ள நோட்டு வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகர் என்பவரை கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் மூன்று நாட்களுக்கு முன் குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் என்பவரை கேரள தனிப்படை போலீசார் கைது செய்ததும் தெரியவந்தது.



ஹக்கீம் கொடுத்த தகவலின்பேரில், கொழுமம் பகுதியில் தன்னை வனத்துறை அதிகாரி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பிரபு என்பவரை, அவரது வீட்டை வைத்து கேரளா தனிப்படை போலீசார் கைது செய்தனர்.



அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1,78,000 ரூபாய் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் நோட்டு என்னும் இயந்திரம், கள்ள நோட்டு அடிப்பதற்கு பயன்படுத்திய இயந்திரம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பிரபுவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. கள்ள நோட்டு அச்சடித்த சம்பவத்தில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தொடர்புடைய இன்னும் பல குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கேரளா போலீசார் தெரிவித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஹக்கீம், பிரபு ஆகியோருடன் கேரளா போலீசார் தேனி சென்றனர்.



அரசு அதிகாரி எனக் கூறி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கள்ளநோட்டுகளை அடித்து விநியோகம் செய்ய முயன்ற சம்பவம் கொழுமம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...