கோவையில் பொங்கல் பண்டிகையில் 3 நாட்களும் கூடுதலாக சேர்ந்த 1,100 டன் குப்பைகள் உடனடியாக அகற்றம்..!

கோவையில் பொங்கல் பண்டிகையான 3 நாட்களில் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 1,100 டன் குப்பைகள் சேர்ந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு குப்பைகளை உடனடியாக அகற்றியுள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தினமும் 1000 முதல் 1,200 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் வழக்கத்தை விட கூடுதலாக குப்பைகள் சேரும் என்பது வாடிக்கை தான்.



ஆனாலும், இந்தாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களிலும் தலா 1,100 டன் குப்பைகள் சேர்ந்துள்ளது.



இதனிடையே முன்னெச்சரிக்கையாக கடந்த சனிக்கிழமையில் இருந்தே மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை வேகப்படுத்தியதால் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.

ஒவ்வொது நாளும் கூடுதலாக 1,100 டன் குப்பைகள் சேர்ந்தாலும் வழக்கமான பணியாளர்களை கொண்டே இந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு சில இடங்களில் குப்பைகள் தேங்கியே உள்ளது, அதனையும் இன்று மாலைக்குள் முழுமையாக அகற்றப்படும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



மண்டல வாரியாக தூய்மை பணியாளர்கள் சிறு சிறு வண்டிகள் மூலம் கூடுதலாக போடப்பட்ட குப்பைகளை சேகரித்தும், வீடு வீடாகவும் குப்பைகள் சேகரித்தும் அனைத்து லாரிகள் மூலம் இரவு பகலாக வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு திடக்கழிவு மேலாண்மை செய்யும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை நாட்களில் கூட துரிதமாக செயல்பட்டு மாநகரில் தூய்மை பணிகளை சிறப்பாக செய்த ஊழியர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...