தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து கூற சரியான நபர் நான் இல்லை என முன்னாள் ஆளுநர் ரோசைய்யா பேட்டி


தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க சரியான நபர் நான் இல்லை என கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா தெரிவித்தார்.

கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் தமிழக ஆளுநர் ரோசைய்யா இன்று விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்காலிக முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆகியோர் தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் அடங்கிய பட்டியலை பொறுப்பு கவர்னரிடம் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோசைய்யா, பதில் சொல்ல நான் சரியான நபர் இல்லை.

இன்று மாலையோ அல்லது நாளையோ இதுகுறித்து ஆளுநரின் கருத்து வெளியாகலாம். நானும் சாதாரண மக்களைப்போல் ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கிறேன். 

பா ஜ க பின்னாலிருந்து செயல்படுவதும், அ.தி.மு.க  எம்எல்ஏ-க்கள் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுவதும் தனக்கு தெரியாது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...