உதகையில் ஜீரோ டிகிரி வெப்பம் - உறைபனியால் முடங்கிய இயல்பு வாழ்க்கை!

நீலகிரி மாவட்டம் உதகையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை வெப்பநிலை 0 டிகிரிக்கு சரிந்து, உறைபனி பொழிந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது.



நீலகிரி: மலைகளின் ராணி என்ற பெருமைக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒன்று. குளிர்காலங்களில் இங்கு அதிகப்படியான குளிர் மற்றும் உறைபனிப் பொழிவு இருக்கும்.



தற்போது, குளிர்காலம் என்பதால், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று அதிகாலை கடும் உறை பனிப்பொழிவு காணப்பட்டது.

உதகையில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரான சூழல் நிலவியது.



இந்த நிலையில், உதகை அருகே உள்ள தலைகுந்தா, அவலாஞ்சி, காந்தள் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை O டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அரசு தாவரவியல் பூங்காவில் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானது.

இதனால், உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை அதிகப்படியான உறைப் பனிப்பொழிவு காணப்பட்டது.



உதகை குதிரைப்பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா, எச்.பி.எஃப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்கள், பச்சை புல்வெளிகளில் உறை பனி படிந்து, வெள்ளை கம்பளம்போல் காட்சி அளித்தது.



அதுமட்டுமின்றி, அப்பகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும், விவசாய பயிர்களின் மீதும் உறைபனியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

இந்த உறைபனியால் காலை 10 மணி வரை கடுமையான குளிர் நிலவியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...