திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு

திருப்பூரில் கணவர் கொடுமை குறித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த இளம்பெண், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது மகள் சௌந்தர்யாவை, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவரது உறவினரான கோவை மாவட்டத்தை சேர்ந்த மனோகர் என்ற கட்டிட தொழிலாளிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இதனிடையே, குடிக்கு அடிமையான மனோகர் திருமணம் ஆனது முதல் சௌந்தர்யாவை அடித்து உதைத்து துன்புறுத்திவந்ததாகத் தெரிகிறது. இது குறித்து நியாயம் கேட்கச் சென்ற மஞ்சுளாவையும் மனோகர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சௌந்தர்யா மற்றும் அவரது தாய் மஞ்சுளா ஆகியோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரண்டு மாதங்களாகியும், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் சௌந்தர்யா, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.



அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், சௌந்தர்யாவை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

திருமணமான நான்கு மாதங்களிலேயே இளம்பெண் ஒருவர், குடிகார கணவரின் கொடுமை தாங்காமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...