பொங்கலன்று நடக்கும் எஸ்பிஐ கிளார்க் தேர்வு - தேதியை மாற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கலன்று நடைபெறவுள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளார்க் தேர்வின் தேதியை மாற்றக்கோரி கோவை தலைமை தபால் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.


கோவை: வரும் ஜனவரி 15ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அன்றைய தினத்தில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வை வேறு தேதியில் எஸ்.பி.ஐ நிர்வாகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கோவை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொங்கலன்று நடக்கும் கிளார்க் தேர்வின் தேதியை மாற்றக்கோரி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, தமிழகத்தை பொறுத்தவரை ஜனவரி 14, 15, 16, ஆகிய நாட்களில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்தகைய சூழலில் பாரத ஸ்டேட் வங்கி தேர்வில், தமிழகத்தில் காலியாக உள்ள 350 க்கும் மேற்பட்ட இடங்களுக்காக 5,000 க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வில் தமிழர்கள் அதிக அளவு கலந்து கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையில் தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே தமிழர்களின் திருவிழா நாட்களில் எஸ்.எஸ்.ஐ, ரயில்வே உள்ளிட்ட துறைகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது.

தமிழர்களை அரசுப்பணியில் புறக்கணிக்கும் வேலையை விடுத்து , பண்டிகை இல்லாத காலங்களில் தேர்வுகளை நடத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும். ஒன்றிய அரசு பள்ளிகளில் மாட்டுப் பொங்கலன்று விடுமுறை அளிக்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...