பொங்கலன்று நடக்கும் எஸ்பிஐ கிளார்க் தேர்வு - தேதியை மாற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கலன்று நடைபெறவுள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளார்க் தேர்வின் தேதியை மாற்றக்கோரி கோவை தலைமை தபால் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.


கோவை: வரும் ஜனவரி 15ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அன்றைய தினத்தில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வை வேறு தேதியில் எஸ்.பி.ஐ நிர்வாகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கோவை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொங்கலன்று நடக்கும் கிளார்க் தேர்வின் தேதியை மாற்றக்கோரி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, தமிழகத்தை பொறுத்தவரை ஜனவரி 14, 15, 16, ஆகிய நாட்களில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்தகைய சூழலில் பாரத ஸ்டேட் வங்கி தேர்வில், தமிழகத்தில் காலியாக உள்ள 350 க்கும் மேற்பட்ட இடங்களுக்காக 5,000 க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வில் தமிழர்கள் அதிக அளவு கலந்து கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையில் தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே தமிழர்களின் திருவிழா நாட்களில் எஸ்.எஸ்.ஐ, ரயில்வே உள்ளிட்ட துறைகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது.

தமிழர்களை அரசுப்பணியில் புறக்கணிக்கும் வேலையை விடுத்து , பண்டிகை இல்லாத காலங்களில் தேர்வுகளை நடத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும். ஒன்றிய அரசு பள்ளிகளில் மாட்டுப் பொங்கலன்று விடுமுறை அளிக்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...