கோவையில் 'புகையில்லா போகி பண்டிகை' கொண்டாட வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

போகிப் பண்டிகையையொட்டி கோவை மாநகராட்சியில் புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிக்கை.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ வரும் 14.01.2023 அன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு “புகையில்லா போகி”யை கடைபிடிக்கும்‌ விதமாக கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ பொதுமக்கள்‌ தங்கள்‌ வீடுகளில்‌ சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும்‌, மக்காத குப்பைகள்‌, அபாயகரமான குப்பைகள்‌ மற்றும்‌ இதர குப்பைகளை பொது இடங்களிலோ, குப்பைத்‌ தொட்டிகளிலோ மற்றும்‌ காலி இடங்களிலோ வீசி எரிய வேண்டாமென்றும்‌, தீ பற்ற வைத்து எரித்து விட வேண்டாம்.

பொதுமக்கள்‌ தங்கள்‌ வீட்டில்‌ சேகரிக்கப்படும்‌ குப்பைகளை தனித்தனியாக பிரித்து தினசரி குப்பைகளை சேகரிக்க வரும்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ வழங்கி “புகையில்லா போகி” பண்டிகையாக கடைபிடித்து, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதியை தூய்மையாக வைத்துக்‌ கொள்ள பொதுமக்களுக்கு இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...