முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை முகாம்

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தாயிடமிருந்து பிரிந்து தவிக்கும் காட்டுயானை குட்டிகள் மற்றும் பொதுமக்களை தாக்கி கொல்லும் யானைகளை பிடித்து வரப்பட்டு வளர்க்கபட்டு வருகின்றன. அதில் சில யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டும், சில யானைகள் கும்கிகளாகவும் உள்ளன.



இந்த நிலையில் யானைகளின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முகாமில் உள்ள யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.



அந்த பரிசோதனைக்கு பின் யானைகளின் உடல் எடைக்கு ஏற்ப உணவுகள் வழங்கபட்டு, உடல் பயிற்சிகள் வழங்கபடுகின்றன.



அதன் படி முதுமலை அருகே தொரப்பள்ளியில் உள்ள வனத்துறை சோதனை சாவடிக்கு யானைகள் அழைத்து செல்லபட்டு அவற்றின் உடல் எடை சோதனை செய்யப்பட்டது. வயதான யானைகள் மற்றும் மஸ்து யானைகள் தவிர்த்து முகாமிலிருந்த 19 யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...