கோவையில் டாஸ்மாக் பாரில் சப்ளையர் மீது தாக்குதல் - 7 பேர் கொண்ட கும்பல் கைது

தடாகம் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், நண்பர்களுடன் சேர்ந்து பார் ஊழியரை தாக்கி விட்டு, பாரில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாருக்கு, பி.என்.புதூர் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ரகுராமன் (20), அவரது நண்பர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஆகிய இருவரும் மது குடிக்க வந்தனர்.

அப்போது குடிபோதையில் இருவரும் பாரில் மது குடித்து கொண்டிருந்த சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், பாரில் பணிபுரிந்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சேர்மன்ராஜ் (28), இருவரையும் கண்டித்துள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரகுராமனும், அவரது நண்பரும் போன் செய்து மேலும் 7 பேரை அங்கு வரவழைத்துள்ளனர். பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பார் ஊழியர் சேர்மன்ராஜை தகாத வார்த்தைகளால் திட்டி, பீர்பாட்டிலால் அவரை தாக்கியுள்ளனர். பின்னர், பாரில் இருந்த மேஜை மற்றும் இருக்கைகளை அடித்து உடைத்து சூறையாடினர்.

இதை தடுக்க முற்பட்ட பார் சீனியர்களை மிரட்டி அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் தலையில் காயமடைந்த சேர்மன்ராஜ் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் பார் ஊழியரை தாக்கி பாரை சூறையாடிய ரகுராமன், மட்டன்கடை ஊழியர் தினேஷ்குமார் (23), ஆர்.ஜி.புதூரை சேர்ந்த நாகேந்திரன் (31), சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்த தனசேகரன்(31), குறிச்சியை சேர்ந்த நவீன்(28), வீரகேரளத்தை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்த பிரவீன்(30) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ராமு, அரவிந்தன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...