2022-ஆம் ஆண்டிற்கான ‘விஷ்ணுபுரம் விருது’ - எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்பட்டது

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்ற 2022-ஆம் ஆண்டிற்கான ‘விஷ்ணுபுரம் விருது’ வழங்கும் விழாவில், பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்பட்டது.


கோவை: நவீன தமிழ் இலக்கியத்திற்கு செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் விதமாக 'விஷ்ணுபுரம் விருது' கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது கலையம்சம் மிக்க விருது சிற்பமும், பாராட்டுப் பத்திரமும், ரூ.2,00,000 விருதுத் தொகையை உள்ளடக்கியதாகும்.

இந்நிலையில், 2022-ஆம் ஆண்டிற்கான 13வது விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா, கோவை ஆர்.எஸ்.புரம் தனியார் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், விருது பெறும், எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் எழுத்தாளுமை குறித்த 'தி அவுட்சைடர்' என்ற ஆவணப்படம், எழுத்தாளர் அராத்துவின் இயக்கத்தில் திரையிடப்பட்டது.



மேலும், அவரது படைப்புலகம் குறித்து சக எழுத்தாளர்கள் எழுதிய நூலும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் மமங் தாய், எழுத்தாளர் ஆர். காளிப்ரசாத், எழுத்தாளர் போகன் சங்கர், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இறுதியாக எழுத்தாளர் சாரு நிவேதிதா ஏற்புரை வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...