2022-ஆம் ஆண்டிற்கான ‘விஷ்ணுபுரம் விருது’ - எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்பட்டது

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்ற 2022-ஆம் ஆண்டிற்கான ‘விஷ்ணுபுரம் விருது’ வழங்கும் விழாவில், பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்பட்டது.


கோவை: நவீன தமிழ் இலக்கியத்திற்கு செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் விதமாக 'விஷ்ணுபுரம் விருது' கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது கலையம்சம் மிக்க விருது சிற்பமும், பாராட்டுப் பத்திரமும், ரூ.2,00,000 விருதுத் தொகையை உள்ளடக்கியதாகும்.

இந்நிலையில், 2022-ஆம் ஆண்டிற்கான 13வது விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா, கோவை ஆர்.எஸ்.புரம் தனியார் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், விருது பெறும், எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் எழுத்தாளுமை குறித்த 'தி அவுட்சைடர்' என்ற ஆவணப்படம், எழுத்தாளர் அராத்துவின் இயக்கத்தில் திரையிடப்பட்டது.



மேலும், அவரது படைப்புலகம் குறித்து சக எழுத்தாளர்கள் எழுதிய நூலும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் மமங் தாய், எழுத்தாளர் ஆர். காளிப்ரசாத், எழுத்தாளர் போகன் சங்கர், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இறுதியாக எழுத்தாளர் சாரு நிவேதிதா ஏற்புரை வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...