வார்டு எண் 86: புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை திறந்து வைத்த மேயர் கல்பனா

கோவை தெற்கு 86வது வார்டுக்கு உட்பட்ட உக்கடம்‌ புல்லுக்காடு பகுதியில்‌ புனரமைக்கப்பட்ட நாய்கள்‌ கருத்தடை மையத்தை மேயர்‌ கல்பனா ஆனந்தக்குமார்‌ குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்‌.



கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌ 86-க்கு உட்பட்ட உக்கடம்,‌ புல்லுக்காடு பகுதியில்‌ இருந்த நாய்கள் கருத்தடை மையம் அண்மையில் புனரமைக்கப்பட்டது.



இந்நிலையில் புனரமைக்கப்பட்ட இந்த மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், இதில் கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தக்குமார்‌ கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்‌.



இதனையடுத்து, சாலை மற்றும்‌ தெருக்களில்‌ பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்‌ ஆதரவற்ற கால்நடைகளை பிடிப்பதற்காக புதிய வாகனத்தையும் மேயர் கல்பனா கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.



கோவை மாநகராட்சியில்‌ பிராணிமித்திரன்‌ மற்றும்‌ எச்‌.ஏ.எஸ்‌ தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்‌ சீரநாய்க்கன் பாளையம்‌, ஒண்டிப்புதார்‌ ஆகிய இடங்களில்‌ செயல்பட்டு வரும்‌ நாய்கள்‌ கருத்தடை மையங்கள்‌ மூலம்‌ கடந்த மார்ச்‌ மாதம்‌ முதல்‌ நவம்பர் மாதம்‌ வரை சுமார்‌ 2300 ஆதரவற்ற நாய்களை பிடித்து சட்டப்படி கருத்தடை செய்துள்ளனர்‌.

இவர்களுக்கு ஆகஸ்ட்‌ மாதம்‌ வரை ரூ.445 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. செப்டம்பர்‌ மாதம்‌ முதல்‌ ரூ.700 ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.



தற்போது சாலை மற்றும்‌ தெருக்களில்‌ போக்குவரத்திற்கும்‌ பொதுமக்களுக்கும்‌ இடையூறு ஏற்படுத்தும்‌ கால்நடைகளை பிடிப்பதற்கும்‌ வாகனம்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்த வாகனம்‌ ஆதரவற்ற கால்நடைகளை பிடித்து பாதுகாப்பாக கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.



இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர் ரா.வெற்றிசெல்வன்‌‌, துணை ஆணையர் மரு.மோ.ஷர்மிளா‌, சுகாதாரக்‌ குழுத்தலைவா்‌ மாரிச்செல்வன்‌, மாமன்ற உறுப்பினர்‌ அகமது ஹபீ்‌, உதவி நகர்நல அலுவலா்‌ வசந்த்‌ திவாகர்‌, கால்நடை மருத்துவர்‌ செந்தில்நாதன்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர்‌ ராமு, பிராணி மித்திரன்‌ தொண்டு நிறுவனத்தினர்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...