வார்டு எண் 86: புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை திறந்து வைத்த மேயர் கல்பனா

கோவை தெற்கு 86வது வார்டுக்கு உட்பட்ட உக்கடம்‌ புல்லுக்காடு பகுதியில்‌ புனரமைக்கப்பட்ட நாய்கள்‌ கருத்தடை மையத்தை மேயர்‌ கல்பனா ஆனந்தக்குமார்‌ குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்‌.



கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌ 86-க்கு உட்பட்ட உக்கடம்,‌ புல்லுக்காடு பகுதியில்‌ இருந்த நாய்கள் கருத்தடை மையம் அண்மையில் புனரமைக்கப்பட்டது.



இந்நிலையில் புனரமைக்கப்பட்ட இந்த மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், இதில் கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தக்குமார்‌ கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்‌.



இதனையடுத்து, சாலை மற்றும்‌ தெருக்களில்‌ பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்‌ ஆதரவற்ற கால்நடைகளை பிடிப்பதற்காக புதிய வாகனத்தையும் மேயர் கல்பனா கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.



கோவை மாநகராட்சியில்‌ பிராணிமித்திரன்‌ மற்றும்‌ எச்‌.ஏ.எஸ்‌ தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்‌ சீரநாய்க்கன் பாளையம்‌, ஒண்டிப்புதார்‌ ஆகிய இடங்களில்‌ செயல்பட்டு வரும்‌ நாய்கள்‌ கருத்தடை மையங்கள்‌ மூலம்‌ கடந்த மார்ச்‌ மாதம்‌ முதல்‌ நவம்பர் மாதம்‌ வரை சுமார்‌ 2300 ஆதரவற்ற நாய்களை பிடித்து சட்டப்படி கருத்தடை செய்துள்ளனர்‌.

இவர்களுக்கு ஆகஸ்ட்‌ மாதம்‌ வரை ரூ.445 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. செப்டம்பர்‌ மாதம்‌ முதல்‌ ரூ.700 ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.



தற்போது சாலை மற்றும்‌ தெருக்களில்‌ போக்குவரத்திற்கும்‌ பொதுமக்களுக்கும்‌ இடையூறு ஏற்படுத்தும்‌ கால்நடைகளை பிடிப்பதற்கும்‌ வாகனம்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்த வாகனம்‌ ஆதரவற்ற கால்நடைகளை பிடித்து பாதுகாப்பாக கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.



இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர் ரா.வெற்றிசெல்வன்‌‌, துணை ஆணையர் மரு.மோ.ஷர்மிளா‌, சுகாதாரக்‌ குழுத்தலைவா்‌ மாரிச்செல்வன்‌, மாமன்ற உறுப்பினர்‌ அகமது ஹபீ்‌, உதவி நகர்நல அலுவலா்‌ வசந்த்‌ திவாகர்‌, கால்நடை மருத்துவர்‌ செந்தில்நாதன்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர்‌ ராமு, பிராணி மித்திரன்‌ தொண்டு நிறுவனத்தினர்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...