கூடலூரில் PM2 மக்னா யானை தாக்கி மேலும் ஒரு மூதாட்டி உயிரிழப்பு - மக்கள் அச்சம்..!

PM2 மக்னா யானையை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில், புளியம்பாறை பகுதியை சேர்ந்த கல்யாணி என்ற மூதாட்டியின் உடல் யானை தாக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா மற்றும் புளியம்பாறை பகுதியில் PM2 என்ற மக்னா யானை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது.

இந்த யானை இதுவரை 45க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தியதுடன் கடந்த 19ஆம் தேதி பாப்பாத்தி என்ற மூதாட்டியையும் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த யானையை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 12 நாட்களாக அந்த யானையைப் பிடிக்கும் பணியில் கூடலூர் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அந்த யானை தொடர்ந்து போக்கு காட்டி வருவதனால் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் 13-வது நாளாக இன்றும் ட்ரோன் கேமரா மூலம் யானையை கண்காணிக்கும் பணி நடைபெற்றது.

இதன் காரணமாக புளியம்பாறை அருகே உள்ள கற்குபாளி என்ற இடத்தில் PM2 மக்னா யானை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர் பின் தொடர்ந்து சென்ற போது, மூதாட்டி ஒருவரின் உடல் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சடலமாக கிடந்த மூதாட்டி புளியம்பாறை பகுதியை சேர்ந்த கல்யாணி (58) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.



இந்நிலையில், அவரது உடலை மீட்ட காவல்துறையினர் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...