கோவையில் அமைதி நிலவ நடவடிக்கை தேவை - மாநகர காவல் ஆணையாளரிடம் எஸ்டிபிஐ கட்சி மனு

மக்கள் ஆதரவு பெற முடியாதவர்கள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மூலம் தமிழகத்தில் நுழைய நினைப்பதாக கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் முபாரக் கூறியதாவது, கோவையில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதி இல்லை என்று கூறிய அவர், அண்மையில் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் துரதிஷ்டவசமானது என தெரிவித்தார்.

சமூக நல்லிணக்கத்திற்கு மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு அச்சுறுத்தல் என தெரிவித்த நெல்லை முபாரக், இந்த விவகாரத்தில் மதம்,மொழியை பார்க்காமல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் அவசியமில்லை என கூறிய அவர், மக்கள் ஆதரவு பெற முடியாதவர்கள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மூலம் தமிழகத்தில் நுழைய நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

விளம்பர மேனியா நோயால் அண்ணாமலை பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த முபாரக், தமிழக ஆளுநர் ஒரு இணை அரசாங்கத்தை நடத்த நினைப்பதாக குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டுக்கு ஆளுநர் நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

என்ஐஏ என்ற பெயரில் சிறுபான்மையினரை குற்றப்பரம்பரையாக்க பார்ப்பதாகவும் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...