கோவையில் அமைதி நிலவ நடவடிக்கை தேவை - மாநகர காவல் ஆணையாளரிடம் எஸ்டிபிஐ கட்சி மனு

மக்கள் ஆதரவு பெற முடியாதவர்கள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மூலம் தமிழகத்தில் நுழைய நினைப்பதாக கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் முபாரக் கூறியதாவது, கோவையில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதி இல்லை என்று கூறிய அவர், அண்மையில் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் துரதிஷ்டவசமானது என தெரிவித்தார்.

சமூக நல்லிணக்கத்திற்கு மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு அச்சுறுத்தல் என தெரிவித்த நெல்லை முபாரக், இந்த விவகாரத்தில் மதம்,மொழியை பார்க்காமல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் அவசியமில்லை என கூறிய அவர், மக்கள் ஆதரவு பெற முடியாதவர்கள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மூலம் தமிழகத்தில் நுழைய நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

விளம்பர மேனியா நோயால் அண்ணாமலை பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த முபாரக், தமிழக ஆளுநர் ஒரு இணை அரசாங்கத்தை நடத்த நினைப்பதாக குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டுக்கு ஆளுநர் நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

என்ஐஏ என்ற பெயரில் சிறுபான்மையினரை குற்றப்பரம்பரையாக்க பார்ப்பதாகவும் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...