பந்தலூர் அருகே தேயிலை தோட்ட தொழிற்சாலைக்குள் நுழைந்த யானைகள் - அச்சத்தால் ஓட்டம்பிடித்த தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேயிலை தோட்ட தொழிற்சாலைக்குள் மீண்டும் காட்டு யானைகள் நுழைந்த நிலையில், அவற்றை கேரள வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேன்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: பந்தலூர் பகுதியானது கேரள வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டங்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வர தொடங்கியுள்ளன. அவ்வாறு வரும் யானை கூட்டங்கள் அடிக்கடி அரசு தேயிலை தோட்டத்திற்குள்ளும், தொழிற்சாலை பகுதிக்குள்ளும் வருவது வாடிக்கையாக உள்ளது.



இந்நிலையில் கூடலூர் - கேரளா மாநில இணைப்பு பகுதியில் இருக்கக்கூடிய இலியாஸ் கடை பகுதிக்கு ஒரு குட்டியுடன் இரண்டு பெண் யானைகள் புகுந்தன.



அங்கிருந்த புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த அந்த யானைகள் பின்னர் மெதுவாக அருகே உள்ள அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்தன.



யானைகளை பார்த்த தொழிலாளர்கள் தேயிலை பறித்து கொண்டு இருந்த சக தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்க அச்சமடைந்த தொழிலளர்கள் உடனடியாக அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

யானை கூட்டத்தை கேரள வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...