பந்தலூர் அருகே தேயிலை தோட்ட தொழிற்சாலைக்குள் நுழைந்த யானைகள் - அச்சத்தால் ஓட்டம்பிடித்த தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேயிலை தோட்ட தொழிற்சாலைக்குள் மீண்டும் காட்டு யானைகள் நுழைந்த நிலையில், அவற்றை கேரள வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேன்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: பந்தலூர் பகுதியானது கேரள வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டங்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வர தொடங்கியுள்ளன. அவ்வாறு வரும் யானை கூட்டங்கள் அடிக்கடி அரசு தேயிலை தோட்டத்திற்குள்ளும், தொழிற்சாலை பகுதிக்குள்ளும் வருவது வாடிக்கையாக உள்ளது.



இந்நிலையில் கூடலூர் - கேரளா மாநில இணைப்பு பகுதியில் இருக்கக்கூடிய இலியாஸ் கடை பகுதிக்கு ஒரு குட்டியுடன் இரண்டு பெண் யானைகள் புகுந்தன.



அங்கிருந்த புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த அந்த யானைகள் பின்னர் மெதுவாக அருகே உள்ள அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்தன.



யானைகளை பார்த்த தொழிலாளர்கள் தேயிலை பறித்து கொண்டு இருந்த சக தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்க அச்சமடைந்த தொழிலளர்கள் உடனடியாக அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

யானை கூட்டத்தை கேரள வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...