பந்தலூர் அருகே தேயிலை தோட்ட தொழிற்சாலைக்குள் நுழைந்த யானைகள் - அச்சத்தால் ஓட்டம்பிடித்த தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேயிலை தோட்ட தொழிற்சாலைக்குள் மீண்டும் காட்டு யானைகள் நுழைந்த நிலையில், அவற்றை கேரள வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேன்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: பந்தலூர் பகுதியானது கேரள வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டங்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வர தொடங்கியுள்ளன. அவ்வாறு வரும் யானை கூட்டங்கள் அடிக்கடி அரசு தேயிலை தோட்டத்திற்குள்ளும், தொழிற்சாலை பகுதிக்குள்ளும் வருவது வாடிக்கையாக உள்ளது.



இந்நிலையில் கூடலூர் - கேரளா மாநில இணைப்பு பகுதியில் இருக்கக்கூடிய இலியாஸ் கடை பகுதிக்கு ஒரு குட்டியுடன் இரண்டு பெண் யானைகள் புகுந்தன.



அங்கிருந்த புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த அந்த யானைகள் பின்னர் மெதுவாக அருகே உள்ள அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்தன.



யானைகளை பார்த்த தொழிலாளர்கள் தேயிலை பறித்து கொண்டு இருந்த சக தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்க அச்சமடைந்த தொழிலளர்கள் உடனடியாக அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

யானை கூட்டத்தை கேரள வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...