பந்தலூர் அருகே தேயிலை தோட்ட தொழிற்சாலைக்குள் நுழைந்த யானைகள் - அச்சத்தால் ஓட்டம்பிடித்த தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேயிலை தோட்ட தொழிற்சாலைக்குள் மீண்டும் காட்டு யானைகள் நுழைந்த நிலையில், அவற்றை கேரள வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேன்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: பந்தலூர் பகுதியானது கேரள வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டங்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வர தொடங்கியுள்ளன. அவ்வாறு வரும் யானை கூட்டங்கள் அடிக்கடி அரசு தேயிலை தோட்டத்திற்குள்ளும், தொழிற்சாலை பகுதிக்குள்ளும் வருவது வாடிக்கையாக உள்ளது.



இந்நிலையில் கூடலூர் - கேரளா மாநில இணைப்பு பகுதியில் இருக்கக்கூடிய இலியாஸ் கடை பகுதிக்கு ஒரு குட்டியுடன் இரண்டு பெண் யானைகள் புகுந்தன.



அங்கிருந்த புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த அந்த யானைகள் பின்னர் மெதுவாக அருகே உள்ள அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்தன.



யானைகளை பார்த்த தொழிலாளர்கள் தேயிலை பறித்து கொண்டு இருந்த சக தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்க அச்சமடைந்த தொழிலளர்கள் உடனடியாக அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

யானை கூட்டத்தை கேரள வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...