திருப்பூர் கல்லூரி சாலை அருகே மனைவியை தவறாக பேசிய நபரை தட்டிக்கேட்ட கணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலை துவாரகை நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் பிரவீன். கும்பகோணத்தை சேர்ந்த இவர் திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் அண்ணாமலை என்பவர் பிரவீனின் மனைவி ராணி என்பவரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த பிரவீன், மது போதையில் அண்ணாமலை வீட்டிற்கு தகராறு செய்ய சென்றுள்ளார். ஆனால், அண்ணாமலை வெளியூர் சென்றிருந்ததால், பூட்டிய வீட்டின் முன்பு நின்று அண்ணாமலையை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த அண்ணாமலை நேற்றிரவு வீட்டிற்கு திரும்பி வந்து மது போதையில் பிரவீன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரவீனை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், துவாரகை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் அண்ணாமலை என்பவர் பிரவீனின் மனைவி ராணி என்பவரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த பிரவீன், மது போதையில் அண்ணாமலை வீட்டிற்கு தகராறு செய்ய சென்றுள்ளார். ஆனால், அண்ணாமலை வெளியூர் சென்றிருந்ததால், பூட்டிய வீட்டின் முன்பு நின்று அண்ணாமலையை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த அண்ணாமலை நேற்றிரவு வீட்டிற்கு திரும்பி வந்து மது போதையில் பிரவீன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரவீனை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், துவாரகை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.