மனைவியை தவறாக பேசிய நபரை தட்டிக்கேட்ட கணவர் குத்திக்கொலை - திருப்பூரில் பரபரப்பு..!

திருப்பூர் கல்லூரி சாலை அருகே மனைவியை தவறாக பேசிய நபரை தட்டிக்கேட்ட கணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலை துவாரகை நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் பிரவீன். கும்பகோணத்தை சேர்ந்த இவர் திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் அண்ணாமலை என்பவர் பிரவீனின் மனைவி ராணி என்பவரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த பிரவீன், மது போதையில் அண்ணாமலை வீட்டிற்கு தகராறு செய்ய சென்றுள்ளார். ஆனால், அண்ணாமலை வெளியூர் சென்றிருந்ததால், பூட்டிய வீட்டின் முன்பு நின்று அண்ணாமலையை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த அண்ணாமலை நேற்றிரவு வீட்டிற்கு திரும்பி வந்து மது போதையில் பிரவீன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரவீனை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், துவாரகை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...