'மண் காப்போம்' இயக்கம் சார்பில் வரும் நவ.13-ல் ஆற்காட்டில் மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கம்

வரும் நவம்பர் 13ஆம் தேதி ஈஷா அறக்கட்டளையின் "மண் காப்போம்" இயக்கம் சார்பில் ஆற்காட்டில் நெல் சாகுபடி குறித்த இயற்கை விவசாய கருத்தரங்கில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு.


கோவை: ஈஷா அறக்கட்டளையின் "மண் காப்போம்" இயக்கம் சார்பில் வரும் நவம்பர் 13ஆம் தேதி ஆற்காட்டில் நெல் சாகுபடி குறித்த இயற்கை விவசாய கருத்தரங்கம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மண் காப்போம் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஷா அறக்கட்டளையின் "மண் காப்போம்" இயக்கம் சார்பில் நெல் சாகுபடி குறித்த இயற்கை விவசாய கருத்தரங்கம் ஆற்காட்டில் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். விளாப்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ மகாலட்சுமி செவிலியர் கல்லூரியில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பல்வேறு முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக 2 கிலோ விதை நெல்லில் 90 மூட்டை மகசூல் (7000 கிலோ) எடுத்த சாதனை விவசாயி நாகரத்தினம் நாயுடு கலந்து கொண்டு நெல்லில் அதிக மகசூல் எடுக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி உரையாற்ற உள்ளார்.

மேலும், நெற்பயிரில் வரும் பூச்சிகள், நோய் தாக்குதல் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூச்சியியல் வல்லுநர் பூச்சி. நீ. செல்வம் ஆலோசனை வழங்க உள்ளார். குறிப்பாக, நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை கண்டறிவதில் தொடங்கி அதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்க உள்ளார்.

பாரம்பரிய நெல் சாகுபடியில் அதிக மகசூல் எடுத்து தமிழக அரசின் விருது பெற்ற பெண் விவசாயி அம்பாசமுத்திரம் லட்சுமி தேவி, நெல் சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் பாரம்பரிய நெல் ரகங்களிலும் அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள் குறித்தும் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

மதுரையை சேர்ந்த தான்யாஸ் நிறுவனத்தின் தினேஷ் மணி, பாரம்பரிய அரிசியில் மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் வழிமுறைகளை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்க உள்ளார். இது தவிர பாரம்பரிய விதைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, களையெடுக்கும் கருவிகளின் கண்காட்சியும் இந்த கருத்தரங்கில் இடம்பெற உள்ளது.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், 94425 90077, 83000 93777 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...