கோவையில் உரிய ஆவணங்களின்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.80 லட்சம் பணம் பறிமுதல்….!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் கோவைக்கு பேருந்தில் பயணித்த போது, நடத்துனரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது, அவரது பையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 80 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


கோவை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் இவர் பேருந்தில் வந்த போது, உடன் வைத்திருந்த கை பைக்கு டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார். அப்போது நடத்துநர் குமாரை பைக்கான டிக்கெட் எடுக்க வலியுறுத்தியுள்ளார்.ஆனால் குமார் டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார். இதனால் நடத்துனருக்கும் குமாருக்கு வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதையடுத்து, நடத்துநர் பேருந்தை நேராக காட்டூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து புகார் அளித்தார். இதையடுத்து, காட்டூர் போலீசார் குமாரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், சந்தேகத்திற்கிடமாக இருந்த அந்த பையை சோதனை செய்தனர்.

அப்போது அந்த பையில் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. போலீசார் பணத்தை எண்ணி பார்த்த போது அதில் ரூ.80 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், பைனான்ஸ் வழங்குவதற்காக பணம் வைத்திருந்ததாக குமார் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், அவரிடம் அந்த பணத்திற்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், இது ஹவாலா பணமா..? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.

இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரூ.80 லட்சம் பணத்திற்கான உரிய ஆவணங்களை அளிக்கவில்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.80 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...