கோவையில் உரிய ஆவணங்களின்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.80 லட்சம் பணம் பறிமுதல்….!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் கோவைக்கு பேருந்தில் பயணித்த போது, நடத்துனரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது, அவரது பையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 80 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


கோவை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் இவர் பேருந்தில் வந்த போது, உடன் வைத்திருந்த கை பைக்கு டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார். அப்போது நடத்துநர் குமாரை பைக்கான டிக்கெட் எடுக்க வலியுறுத்தியுள்ளார்.ஆனால் குமார் டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார். இதனால் நடத்துனருக்கும் குமாருக்கு வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதையடுத்து, நடத்துநர் பேருந்தை நேராக காட்டூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து புகார் அளித்தார். இதையடுத்து, காட்டூர் போலீசார் குமாரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், சந்தேகத்திற்கிடமாக இருந்த அந்த பையை சோதனை செய்தனர்.

அப்போது அந்த பையில் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. போலீசார் பணத்தை எண்ணி பார்த்த போது அதில் ரூ.80 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், பைனான்ஸ் வழங்குவதற்காக பணம் வைத்திருந்ததாக குமார் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், அவரிடம் அந்த பணத்திற்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், இது ஹவாலா பணமா..? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.

இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரூ.80 லட்சம் பணத்திற்கான உரிய ஆவணங்களை அளிக்கவில்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.80 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...