கோவை சிறுவாணி சாலை அருகே தரைப்பாலத்திற்கு தோண்டிய குழியில் லாரி சிக்கியதால் 2 மணி நேர போக்குவரத்து பாதிப்பு

தெலுங்குபாளையம் அருகே உள்ள வாய்க்கால் சோதனைச்சாவடி அருகே சாலையின் குறுக்கே தரைப்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அவ்வழியாக கோழித்தீவன லோடுடன் வந்த ஈச்சர் லாரியின் சக்கரம் சாலை அருகே தோண்டப்பட்ட குழியில் சிக்கியது.



கோவை: கோவை சிறுவாணி சாலை தெலுங்குபாளையம் அருகே உள்ள வாய்க்கால் சோதனைச் சாவடி அருகே சாலையின் குறுக்கே தரைப்பாலப் பணிகள் மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் அந்த சாலையில் ஓரத்தில் வாகனங்கள் இயக்கப்பட்ட நிலையில், அவ்வழியாக கோழித்தீவன லோடுடன் வந்த ஈச்சர் லாரியின் சக்கரம்சாலை அருகே தோண்டப்பட்ட குழியில் சிக்கியது. இதனால், அந்த சாலையில் எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் நிற்கக்கூடிய காட்சிகளை பார்க்க முடிந்தது. எனவே, அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



இதையடுத்து பொக்லைன் வாகனம் வரவழைக்கப்பட்டு, குழியில் சிக்கிய ஈச்சர் லாரி மீட்கும் முயற்சியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் லாரியை வெளியே எடுக்க முடியாததால், கூடுதல் பொக்லைன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால்,காலை வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...