கோவையில் இருந்து கேரளா கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 5 டன் ரேசன் அரிசி மூட்டைகள் பிடிபட்டன. காவல் துறையினர் விசாரணையில் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த வல்லரசு குறிஞ்சியை சேர்ந்த செந்தில் ஆகியோர் என்று தெரியவந்துள்ளது.


கோவை: தமிழக - கேரளா எல்லை மாவட்டமான கோவையில் இருந்து அடிக்கடி கேரளாவிற்கு பொது விநியோக ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

இதனை கட்டுப்படுத்ததமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தலின் பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு எஸ்.பி. பாலாஜி,அதிகாரிகள் டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர் விவேகானந்தன், பரமேஸ்வரன் உள்ளிட்டோர், கோவை - கேரளா சாலைகளில் கண்காணிப்பு பணியை தீவிரபடுத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை மதுக்கரை சுங்கச்சாவடி அருகே எஸ்.பி.பாலாஜி தலைமையில் திடிர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திடமாக வந்த டெம்போ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக பொது விநியோக ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து முழுமையாக சோதனை செய்த போதுடெம்போவில் தலா 50 கிலோ மூட்டைகளாக 100 மூட்டைகளில் சுமார் 5 டன் ரேசன் பொது விநியோக ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவரது மகன் வல்லரசு (23). என்பதும் இவர் குறிச்சியை சேர்ந்த செந்தில் என்பவரிடம் ஓட்டுநராக வேலை பார்த்து வந்ததும், கோவையில் பல்வேறு பகுதிகளில் பொது விநியோக ரேசன் அரிசி மலிவு விலைக்கு வாங்கி அதனை கேரளாவில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வல்லரசு மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 டன் ரேசன் அரிசி மற்றும் டெம்போ வேனையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...