கோவை சரவணம்பட்டி அருகே குடிபோதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் இருவர் கைது

சரவணம்பட்டி அருகே மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த கோவையை சேர்ந்த மோகன்ராஜ், நீலகிரியை சேர்ந்த சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவை கணபதி அண்ணா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (53). கூலி தொழிலாளியான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (3.11.2022) இரவு வேலை முடிந்து அப்பகுதியில் உள்ள நகர் நல மையம் அருகே சிலருடன் அமர்ந்து மது அருந்தி உள்ளார்.

இந்நிலையில் மறுநாள் வெங்கடேஷ் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அங்கு பணிக்குச் சென்ற தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (26), மற்றும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த சரவணன் (19) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் இருவரும் தற்போது கணபதி பகுதியில் சாலை ஓரத்தில் தங்கிக் கொண்டு கூலி வேலை செய்து வந்ததும், சம்பவத்தன்று வெங்கடேஷூடன் சேர்ந்து மது குடித்த போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து கட்டை மற்றும் கல்லால் வெங்கடேஷை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...