கோவை பேரூர் அருகே கஞ்சா விற்க முயன்ற முன்னாள் பாஜக சேவா அணி மாவட்ட பொதுச்செயலாளர் உட்பட இருவர் கைது – 3.2 கிலோ கஞ்சா பறிமுதல்…!

கோவை பேரூர் – கோவைப்புதூர் சாலையில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை பேரூர் – கோவைப்புதூர் சாலையில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக தெரிகிறது. இதனால், சந்தேகமடைந்த போலீஸார் சோதனை செய்த போது அவர்களது வாகனத்தில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் தனிப்படை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பேரூர் செட்டிபாளையம் பகுதியை முன்னாள் பாஜக சேவா அணி மாவட்ட பொதுச்செயலாளர் வேலுச்சாமி (43), வடவள்ளி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (32) என்பதும் இவர்கள் உள்ளூரில் கஞ்சா விற்பனைக்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த சுமார் 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...