கோவை பேரூர் அருகே கஞ்சா விற்க முயன்ற முன்னாள் பாஜக சேவா அணி மாவட்ட பொதுச்செயலாளர் உட்பட இருவர் கைது – 3.2 கிலோ கஞ்சா பறிமுதல்…!

கோவை பேரூர் – கோவைப்புதூர் சாலையில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை பேரூர் – கோவைப்புதூர் சாலையில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக தெரிகிறது. இதனால், சந்தேகமடைந்த போலீஸார் சோதனை செய்த போது அவர்களது வாகனத்தில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் தனிப்படை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பேரூர் செட்டிபாளையம் பகுதியை முன்னாள் பாஜக சேவா அணி மாவட்ட பொதுச்செயலாளர் வேலுச்சாமி (43), வடவள்ளி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (32) என்பதும் இவர்கள் உள்ளூரில் கஞ்சா விற்பனைக்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த சுமார் 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...