கோவை பேரூர் அருகே கஞ்சா விற்க முயன்ற முன்னாள் பாஜக சேவா அணி மாவட்ட பொதுச்செயலாளர் உட்பட இருவர் கைது – 3.2 கிலோ கஞ்சா பறிமுதல்…!

கோவை பேரூர் – கோவைப்புதூர் சாலையில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை பேரூர் – கோவைப்புதூர் சாலையில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக தெரிகிறது. இதனால், சந்தேகமடைந்த போலீஸார் சோதனை செய்த போது அவர்களது வாகனத்தில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் தனிப்படை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பேரூர் செட்டிபாளையம் பகுதியை முன்னாள் பாஜக சேவா அணி மாவட்ட பொதுச்செயலாளர் வேலுச்சாமி (43), வடவள்ளி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (32) என்பதும் இவர்கள் உள்ளூரில் கஞ்சா விற்பனைக்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த சுமார் 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...