திருப்பூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த ஈஸ்வரன் என்கிற காவலர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நல்லூர் காவல்துறை வேறு ஏதேனும் காரணம் உண்டா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்த தேனி மாவட்டம் சுருளி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (33) என்பவர் நல்லூரில் உள்ள ஆயுதப்படை பிரிவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நல்லூரில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணிக்கு மதுரை மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு சென்று இன்று தான் வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
அப்போது கணவன் மனைவி இடையே சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தை வெளியே இருந்த சமயத்தில் ஈஸ்வரன் வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற நல்லூர் போலீசார் ஈஸ்வரன் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நல்லூரில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணிக்கு மதுரை மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு சென்று இன்று தான் வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
அப்போது கணவன் மனைவி இடையே சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தை வெளியே இருந்த சமயத்தில் ஈஸ்வரன் வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற நல்லூர் போலீசார் ஈஸ்வரன் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.