திருப்பூர் காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை‌

திருப்பூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த ஈஸ்வரன் என்கிற காவலர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நல்லூர் காவல்துறை வேறு ஏதேனும் காரணம் உண்டா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்த தேனி மாவட்டம் சுருளி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (33) என்பவர் நல்லூரில் உள்ள ஆயுதப்படை பிரிவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நல்லூரில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணிக்கு மதுரை மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு சென்று இன்று தான் வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

அப்போது கணவன் மனைவி இடையே சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தை வெளியே இருந்த சமயத்தில் ஈஸ்வரன் வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை‌ செய்து கொண்டார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற நல்லூர் போலீசார் ஈஸ்வரன் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக காவலர் தூக்கிட்டு தற்கொலை‌ செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...