ஒண்டிப்புதூர் உண்டு உறைவிட பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியை நேரில் ஆய்வு மேற்கொண்ட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்.



அப்பள்ளியின் சமையலறை, மாணவர்கள் தங்கும் அறை, எண்ணும் எழுத்தும் திட்ட அறை, கல்வி பயிலும் அறை, கணினி அறை, கழிப்பறைகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



அதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து மாணவ ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அவர் மாணவர்கள் பாடத்தை முழுமையாக கவனிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் நடத்தையில் மாற்றம் இருந்தால் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.



மேலும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கவுன்சிலிங் வழங்க வேண்டும் எனவும் மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்பு திறன் அடிப்படை கணித திறனை மேம்படுத்தும் இத்திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

ஆய்வின் பொழுது கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...