ஒண்டிப்புதூர் உண்டு உறைவிட பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியை நேரில் ஆய்வு மேற்கொண்ட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்.



அப்பள்ளியின் சமையலறை, மாணவர்கள் தங்கும் அறை, எண்ணும் எழுத்தும் திட்ட அறை, கல்வி பயிலும் அறை, கணினி அறை, கழிப்பறைகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



அதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து மாணவ ,மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அவர் மாணவர்கள் பாடத்தை முழுமையாக கவனிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் நடத்தையில் மாற்றம் இருந்தால் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.



மேலும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கவுன்சிலிங் வழங்க வேண்டும் எனவும் மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்பு திறன் அடிப்படை கணித திறனை மேம்படுத்தும் இத்திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

ஆய்வின் பொழுது கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...