சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் - கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம்

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையிலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.



கோவை: சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.



இந்நிலையில் அவர்கள் அளித்த மனுவில், வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

100 நாள் பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். புதிதாக வழங்கும் பட்டாக்களை பெண்கள் பெயரில் வழங்க வேண்டும் மற்றும் நீர்நிலைகள் போன்ற இடங்களில் வாழும் மக்களுக்கு, வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...