சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் - கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம்

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையிலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.



கோவை: சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.



இந்நிலையில் அவர்கள் அளித்த மனுவில், வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

100 நாள் பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். புதிதாக வழங்கும் பட்டாக்களை பெண்கள் பெயரில் வழங்க வேண்டும் மற்றும் நீர்நிலைகள் போன்ற இடங்களில் வாழும் மக்களுக்கு, வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...