மதமாற்ற நோக்கத்துடன் வந்தவர்களை கைது செய்யாமல், இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக குற்றம்சாட்டி, இந்து முன்னனி அமைப்பினர் போத்தனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஸ்பென்டி லெபர்சன் என்ற கிறிஸ்துவ ஊழியரை, மதம் மாற்றம் செய்வதாக கூறி, அவரை தாக்கியதாக இந்து முன்னணி பிரமுகர் உத்தமன் என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், மத மாற்ற நோக்கத்துடன் வந்தவர்களை கைது செய்யாமல், இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக குற்றம்சாட்டி, மாநில நிர்வாக்குழு உறுப்பினர் சதீஸ் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட இந்து முன்னனி அமைப்பினர் போத்தனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, இந்து முன்னனி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில்போலீசார் ஈடுபட்ட போது, மத மாற்றம் பிரச்சாரம் செய்த மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மாநில தலைவர் தலைமையில் போத்தனூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகதெரிவித்தனர்.

இந்நிலையில், மத மாற்ற நோக்கத்துடன் வந்தவர்களை கைது செய்யாமல், இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக குற்றம்சாட்டி, மாநில நிர்வாக்குழு உறுப்பினர் சதீஸ் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட இந்து முன்னனி அமைப்பினர் போத்தனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, இந்து முன்னனி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில்போலீசார் ஈடுபட்ட போது, மத மாற்றம் பிரச்சாரம் செய்த மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மாநில தலைவர் தலைமையில் போத்தனூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகதெரிவித்தனர்.